மதுரை மாநகர காவல் துறையால், புதிய மொபைல் ஆப் மூலம், வீடுகளில் திருட்டு நடக்காமல் கண்காணிக்கும் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வீடுகளில் ஆள் இல்லாததை பயன்படுத்தி, கொள்ளையர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், மதுரை மாநகர காவல் துறை சார்பில், புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மதுரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்பவர்கள், இந்த ஆப் மூலம், கண்காணிப்பு கேமரா தேவை குறித்து விண்ணப்பிக்கலாம் என்றும், அதன்படி பூட்டிய வீட்டைக் கண்காணிக்க, வீட்டின் அருகே வயர்லெஸ் கேமரா பொருத்தப்படும் என்றும் கூறினார்.
அதை கண்காணிக்கும் அதிகாரிகள், மர்ம நபர்கள் நடமாட்டம் தென்படும்போது, தேவையான காவலர்களை அனுப்பி விசாரணை நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள், நிம்மதியாகச் செல்லலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…