“ஏழை பொண்ணு என கூறி காதல் செய்த பையன் நிராகரிப்பு” மாணவி தற்கொலை..!!

Default Image

காதலன் தனது ஏழ்மையைக் கண்டு தன்னை புறக்கணித்ததால் பேரீச்சம்பழத்தில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டு காதலி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுரை ,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரைச் சேர்ந்தவர் சிந்துஜா. இவர் மதுரை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வரும் இவருக்கும் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலை சேர்ந்த கல்லூரி மாணவரான ராம்குமாருடன் நட்பு ஏற்பட்டு பின் காதலாக மாறியுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக படிக்கிற சாக்கில் மதுரையை வலம் வந்த இந்த காதல் ஜோடி, முகநூல் மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் காதலை வளர்த்தனர். டப்ஸ்மாசிலும், டிக்டாக் மியூசிக்கலி ஆப்பில் தங்களது காதலின் ஆழத்தை புகைப்படங்களாக பரிமாறிக்கொண்டனர். இவர்களின் காதல் விவரம் ராம்குமாரின் குடும்பத்திற்கு தெரியவந்தது.

ராம்குமார் தனது தாயார் விருப்பப்படி சிந்துஜாவை வீட்டிற்கும் ராம்குமார் அழைத்துச் சென்றுள்ளார். சிந்துஜாவை அவரது குடும்பத்தினருக்கும் பிடித்து போனதால், இருவரும் வேறு வேறு சாதி என்றாலும் காதலுக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை. சிந்துஜாவின் வீட்டிற்கு சென்று முறைப்படி பெண் கேட்பதற்காக ராம்குமாரின் குடும்பத்தினர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

திருவாதவூரில் சிந்துஜாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதை பார்த்து அவர் மீது ராம்குமாரின் குடும்பத்தினருக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அவசர அவசரமாக வீடு திரும்பிய ராம்குமார் குடும்பத்தினர், சிந்துஜாவை தங்கள் மகனிடம் இருந்து பிரிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் சிந்துஜாவிடம் பேசுவதை ராம்குமார் குறைத்து கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் கடந்த 4 ஆண்டாக உருகி உருகி காதலித்த சிந்துஜாவை, ராம்குமார் தூக்கி வீசும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. சிந்துஜா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது கையை பிளேடால் அறுத்து, அதை வீடியோ எடுத்து ராம்குமாருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார். அதன்பிறகும் காதலனிடமிருந்தும் எந்த அழைப்பும் வராததால் விரக்தியடைந்த சிந்துஜா, கடந்த 31-ம் தேதி பேரீச்சம் பழத்தில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டுள்ளார்.
Related image
உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்துஜா, கடந்த புதன்கிழமை மாஜிஸ்ட்ரேட் முன்பு தனது தற்கொலைக்கு தனது காதலன் ராம்குமார் தான் காரணம் என மரண வாக்குமூலம் அளித்துவிட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஏழ்மையை காரணம் காட்டி, ராம்குமார் தன்னை விட்டு பிரிந்ததாகவும், காதலை மீறிய உறவு தங்களுக்குள் இருந்ததாகவும் சிந்துஜா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலூர் போலீசார் தற்கொலை வழக்குபதிவு செய்து ராம்குமாரையும், அவரது பெற்றோரையும் விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்