அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புறப்பட தயாரானபோது ,5 பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி…!

Default Image

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில்,மதுரையில்  தீக்குளிக்க முயன்ற 5 பெண்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டிடத்திற்கு நாளை பூமி பூஜை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார், புறப்பட தயாரானபோது, அங்கு வந்த ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர்.

தங்களது மகன்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், கேரளாவிற்கு கூலி வேலைக்குச் சென்றவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து கொண்டுவந்துள்ளதாகவும், அவர்களை என்கவுண்டரில் கொன்றுவிடுவோம் என காவல்துறையினர் மிரட்டியதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றிய காவல்துறையினர், 5 பெண்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்