[Representative Image]
தமிழகத்தில் நேற்று காலை தொடங்கிய வருமான வரி சோதனை இரவிலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்தது.
நேற்று காலை முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வந்தனர். இதில் கரூரில் பல்வேறு இடங்களில் இரவு முழுக்க இந்த சோதனை நீடித்துள்ளது. குறிப்பாக டாஸ்மாக் ஒப்பந்தக்காரார்கள் மற்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவரது உறவினர்களில் சிலரது வீடுகள் என இந்த பட்டியல் நீண்டது.
எவ்வளவு நாட்கள் ஐடி சோதனை நடத்தினாலும் முழுதாக ஒத்துழைப்பு தருவோம் எனவும், 2006 முதல் இன்று வரை ஒரு சதுர அடி நிலம் கூட எங்கள் பெயரில் நாங்கள் வாங்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார். மேலும், அரசு அதிகாரிகளை கொண்டு எதிர்கட்சிகளை பாஜக மிரட்ட பார்க்கிறது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பார்தி கண்டனம் தெரிவித்தார்.
கரூர் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் நேற்று காலை சிலர் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தடுத்தால், காவல்துறை பாதுகாப்போடு மீண்டும் துவங்க நேற்று இரவு வரைஅதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சோதனை முடிந்து கரூர் துணை மேயர் வீட்டிற்கு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்தனர். இதனால் அங்கு மேயர் ஆதரவாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…