பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதானதால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவு

Default Image

குளித்தலையில், பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்ததால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்தது. அரசுக்கு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் பழுதடைந்த வீடுகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பயனாளிகளுக்கு வழங்கினார். முழு பராமரிப்பு பணிகளையும் 45 நாட்களுக்குள் முடித்து வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்