Veeranampatti Kaliyamman Temple [Image source : Express]
பட்டியலினத்தவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நிறைவு பெற்று கோவில் சீல்-ஐ மாவட்ட ஆட்சியர் அகற்றினார்.
கரூர் மாவட்டம் வீரணாம்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் கடந்த வைகாசி திருவிழாவின் போது பட்டியலின இளைஞர் கோவிலுக்கு வழிபட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மாற்று சமூகத்தினர் அவரை உள்ளே விட மறுத்துள்ளனர்.
இந்த விவகாரம் இரு தரப்பினரையே பிரச்சனையாக உருவெடுக்க, வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமூக முடிவு எட்டப்படாத காரணத்தால் வீரணாம்பட்டி காளியம்மன் கோவிலுக்கு கடந்த 8ஆம் தேதி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கோவில் சீலை அகற்றினார் . அதன் பிறகு பட்டியலின இளைஞர் உட்பட அனைவரும் ஒன்றாக கோவிலில் வழிபாடு நடத்தினர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…