நேற்று இரவு முதல் விடிய விடிய கரூர் அருகே கோழிப்பண்ணை ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரை அடுத்த தாளவாய்புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அப்பகுதியில், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அந்த கோழிப்பண்ணைக்கு நேற்று நள்ளிரவு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு மற்றும் முறையாக ஆவணங்களைப் பராமரிக்காததது ஆகிய புகார்களின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய நடத்தப்பட்டு வரும் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் கோழிப்பண்ணை உரிமையாளர் ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…