கரூர்

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு.! எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்.!

கரூர்: நிலமோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலி பத்திரங்கள் மூலம் அபகரிப்பு செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது, அண்மையில் காவல்துறையினரிடம் இருந்து […]

#ADMK 4 Min Read
Former ADMK Minister MR Vijayabhaskar

கரூரில் 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்த விவகாரம்.! சிபிசிஐடி கண்காணிப்பில் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கரூரில் 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகள், திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்றுணர். பின்னர் போட்டி முடிந்து, கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதிக்கு சுற்றி பார்க்க ஆசிரியர்கள் துணையுடன் வந்துள்ளனர். மாயனூரில் உள்ள காவிரி […]

4 Min Read
Madurai high court

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் பினாயில் ஊற்றிய 3 சிறார்கள் கைது…!

கரூரில், வீரணாம்பட்டி அரசு நடுநிலை பள்ளியில் குடிநீர் தொட்டியில் பினாயில் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 சிறார்கள் கைது.  கரூரில், வீரணாம்பட்டி அரசு நடுநிலை பள்ளியில், நேற்று முன்தினம் குடிநீர் தொட்டியில் பினாயில் கலக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 3 சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சிறார்களிடம் விசாரணை மேற்கொண்டதில், விளையாட்டுத்தனமாக பினாயிலை குடிநீர் தொட்டியில் ஊற்றியதாக தெரிவித்துள்ளனர்.

2 Min Read
Arrest

பட்டியலினத்தவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரம்.! பேச்சுவார்த்தை நிறைவு.! சீல் அகற்றம்.!

பட்டியலினத்தவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நிறைவு பெற்று  கோவில் சீல்-ஐ மாவட்ட ஆட்சியர் அகற்றினார். கரூர் மாவட்டம் வீரணாம்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் கடந்த வைகாசி திருவிழாவின் போது பட்டியலின இளைஞர் கோவிலுக்கு வழிபட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மாற்று சமூகத்தினர் அவரை உள்ளே விட மறுத்துள்ளனர். இந்த விவகாரம் இரு தரப்பினரையே பிரச்சனையாக உருவெடுக்க, வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமூக முடிவு எட்டப்படாத காரணத்தால் வீரணாம்பட்டி காளியம்மன் […]

3 Min Read
Veeranampatti Kaliyamman Temple

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு!

கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர், உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. அமைச்சரின் சகோதரர் அசோக்குமார், கரூர் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்டோர் இடங்களில் சோதனை நிறைவு பெற்றுள்ளது. நேற்று 7வது நாளாக கரூரில் அமைச்சர் […]

3 Min Read
Minister Senthil balaji

கரூரில் 7வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

எம்சி சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்துறை மற்றும் டாஸ்மாஸ் அரசு ஒப்பதாரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை கடந்த சில நாட்களாக நடைபெற்றது.  இந்த நிலையில், கரூரில் 7வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, கரூரில் அமைச்சர் செந்தி பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை […]

3 Min Read
Income Tax department

வருமானவரி சோதனை.! அதிகாரிகள் மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு.!

வருமான வரித்துறையினர் மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடுகள் அலுவலகங்கள், மற்றும் அவரது உறவினர்கள் இல்லங்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் வீடுகள் என கரூர், சென்னை, கோவை மாவட்டங்களில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீட்டின் முன் குவிந்த அவரது ஆதரவாளர்கள் வருமான வரித்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. […]

4 Min Read
IT Raid

இரவிலும் நீடித்த ஐடி ரெய்டு.! கரூர் துணை மேயர் வீட்டிற்கு சீல்.?

தமிழகத்தில் நேற்று காலை தொடங்கிய வருமான வரி சோதனை இரவிலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்தது.  நேற்று காலை முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வந்தனர். இதில் கரூரில் பல்வேறு இடங்களில் இரவு முழுக்க இந்த சோதனை நீடித்துள்ளது. குறிப்பாக டாஸ்மாக் ஒப்பந்தக்காரார்கள் மற்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவரது உறவினர்களில் சிலரது வீடுகள் என இந்த பட்டியல் நீண்டது. எவ்வளவு நாட்கள் ஐடி சோதனை நடத்தினாலும் முழுதாக […]

4 Min Read
Income tax

காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்து பெற்றோர்கள் சாலை மரியல்..!

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் உடல்களை வாங்க பெற்றோர்கள் மறுப்பு. கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் உயிரிழந்தவர்களின் மாணவிகளின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம் மாயனூர், காதவனை அருகே உள்ள  காவிரி ஆற்றில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த நான்கு மாணவிகள் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து மீட்பு துறையினர் உயிரிழந்த தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]

3 Min Read
Default Image

ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு..! அரசு நிதி உதவி அறிவிப்பு..!

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி அரசு அறிவித்துள்ளது.  காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலா ரூ.2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் மாயனூர், காதவனை அருகே உள்ள  காவிரி ஆற்றில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த நான்கு மாணவிகள் மூழ்கி உயிரிழந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் […]

4 Min Read
Default Image

#BREAKING: கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள் உயிரிழப்பு..!

கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள் சடலமாக மீட்கப்பட்டனர். கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் பள்ளி மாணவிகள் 4 பேர் தண்ணீரில் மூழ்கினர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த நான்கு மாணவிகளும் திருச்சியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்றபோது மாயனூர் காதவனை அருகே உள்ள காவிரி ஆற்றில் இறங்கியுள்ளனர். ஆற்றில் சுழல் உள்ளதை அறியாமல் ஒரு மாணவி ஆற்றில் இறங்கியபோது நீரில் மூழ்கியுள்ளார். ஆற்றில் மூழ்கிய மாணவியை காப்பாற்ற […]

3 Min Read
Default Image

#BREAKING : கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள்..! தேடுதல் பணி தீவிரம்..!

காவிரி ஆற்றில் பள்ளி மாணவிகள் நான்கு பேர் மூழ்கினர். கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் பள்ளி மாணவிகள் 4 பேர் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற மாணவிகள் காவிரி ஆற்றில் இறங்கியபோது  இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீரில் மூழ்கிய மாணவிகள் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவிகளையும் தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2 Min Read
Default Image

#BREAKING: ஊராட்சி துணை தலைவர் தேர்தல் – வெற்றி அறிவிப்பு

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்காக நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் 5வது வார்டு உறுப்பினர் திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் முடிவை வெளியிடலாம் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவை தொடர்ந்து தேர்தல் முடிவை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர். கடந்த டிச19ம் […]

#DMK 3 Min Read
Default Image

கரூர் ஊராட்சி துணை தலைவர் தேர்தல் முடிவை வெளியிடலாம்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கரூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.  கடந்த டிசம்பர் 19ஆம் தேதி கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அதிமுகவை சேர்ந்த திருவிக என்பவர் கடத்தப்பட்டதாகவும், இந்த தேர்தலில் திமுக முறைகேடாக செயல்பட்டதாகவும், தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது எனவும் அந்த மனுவில் குறிப்பிடபட்டு இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் […]

- 2 Min Read
Default Image

மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தர் என கூறி வந்த மக்கள்.! கரூர் மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை.!.

கரூரில் மனநலம் பாதிக்கப்பட்டு, அரைநிர்வாணமாக திரிந்த ஒரு முதியவரை சாமியார் என கூறி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.  கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதிவர் ஒருவரை சித்தர் என கூறி அங்குள்ளவர்கள் வணங்கி வந்துள்ளனர். காணிக்கையையும் அளித்து வந்துள்ளனர். இதில் ஒரு கும்பல், இவருக்கு கோவில் காட்டுவதாக கூறியும் காணிக்கை வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து , கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, அந்த முதியவரை […]

#Karur 2 Min Read
Default Image

2020இல் இறந்தவர் பெயரில் கூட பயிர்க்கடன்.! 244 கரூர் விவசாயிகளுக்கு வந்த குளறுபடி தகவல்.!

கரூர் குளித்தலையில் பயிர்க்கடன் வாங்காத 244 விவசாயிகளுக்கு கடன் பெற்றதாக தகவல் சென்றுள்ளது. மேலும், இறந்தவர் ஒருவரும் கடன் வாங்கியதாக தவறுதலாக பதியப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை துணை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, பயிர்க்கடன் பெறாத 244 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் பெற்றதாகவும், அதற்கான விசாரணைக்கு நேரில் வர வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன்னில் மேலும் ஒரு குளறுபடி என்னவென்றால், திருச்சி மாவட்டம் போதவூரை சேர்ந்த தவசு என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டார். ஆனால், […]

#Karur 3 Min Read
Default Image

கரூரில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு – மாநகராட்சி அதிகாரி சஸ்பெண்ட்..!

விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும்போது கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என கூறி தேசிய மனித உரிமை […]

- 2 Min Read
Default Image

4 பேர் உயிரிழப்பு.! 15 நாட்களுக்குள் கட்டடத்தை இடிக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு.!

கட்டடம் கட்டும் போது செப்டிக் டேங்கில் இருந்து விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த சம்பந்தப்பட்ட கட்டடம் முழுதாக இடிக்க கரூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.    கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்ற வழக்கறிஞர் வீடு கட்டி வந்துள்ளார். அப்போது செப்டிக் டேங்க் கட்டி முடிக்கப்பட்டு , அதன் உள்ளே இருக்கும் சவுக்கு கம்புகளை அவிழ்க்க, உள்ளே சென்ற தொழிலாளர்கள் 4 பேர் உள்ளே விஷ […]

- 3 Min Read
Default Image

கரூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்வு..!

கரூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.  கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். செல்லாண்டிபாளையம் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும்போது கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொழிலாளி கோபால் என்பவர் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் […]

#Death 2 Min Read
Default Image

#BREAKING: கரூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு!

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு. கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். செல்லாண்டிபாளையம் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும்போது கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  

#Karur 1 Min Read
Default Image