ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் எனக்கூறி, உயர்நீதி மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது,
அதில், ஓகி புயலில் மாயமானவர்களில் இன்னும் 271 மீனவர்கள் தான் மீட்கப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 271 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 47 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும், வரும் 25ம் தேதிக்கள் அனைத்து மீனவர்களும் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் மாயமான மீனவர்கள் அனைவரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றதால் அவர்களுக்கு எச்சரிக்கை வழங்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மீட்கப்பட வேண்டிய 271 பேரில் 28 பேர் வெளிமாநில மீனவர்கள் என்றும், மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு நாள்தோறும் ரூ.250 வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
source: dinasuvadu.com
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…