கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு கண்டனம்..!!

Published by
Dinasuvadu desk

கன்னியாகுமரி மாவட்டம்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், 2018 செப்டம்பர் 22-24 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது.இதில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையை கண்டித்து தீர்மானம் போடப்பட்டது.அதில் ,

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டார வாலிபர் சங்கத்தின் இடைக்கமிட்டி மாநாடு 23.9.2018 அன்று நடத்துவதற்கான காவல்துறை அனுமதி கோரப்பட்டது. காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் குறிப்பிட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பிரதிநிதிகள் மாநாடு முடித்து பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வாலிபர் சங்கத்தினர் அமைதியாக எந்த பிரச்சனையுமின்றி கும்பலாக நடந்து சென்றனர். ஆனால், காவல்துறையினர் வேண்டுமென்றே திட்டமிட்டு ஏராளமான போலீசாரை வாலிபர் சங்கத்தினர்  வீடுகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Image result for இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

அது மட்டுமில்லாமல் வாலிபர் சங்க இடைக்கமிட்டி செயலாளர் எட்வின்பிரைட் அவர்களின் அண்ணன் எட்வின் சுரேஷை பணயக் கைதியாக, காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். மேலும் பல தோழர்களின் வீட்டு ஜன்னல்களை  அடித்து நொறுக்கி அராஜகம் செய்து வாலிபர் சங்கத்தினர்  மீது திட்டமிட்டு பொய்வழக்குகளை புனைந்துள்ளனர். பொதுக்கூட்டம் நடந்த ஆலம்பாறை பகுதியில் ஒரு பதற்றமான நிலையை  உருவாக்கியுள்ளனர்.

காவல்துறையினரின் இந்த ஜனநாயக விரோதப்போக்கை வன்மையாக கண்டிப்பதுடன்,  பதியப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டுமெனவும், இதற்கு காரணமான மார்த்தாண்டம் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

DINASUVADU

Published by
Dinasuvadu desk

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

11 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago