மின் தடையால் மக்கள் அவதி..!!

Published by
Dinasuvadu desk

காற்றாலையில் உற்பத்தி குறைவு தான் காரணம் என்று குற்றச்சாட்டு…

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தற்போது மின் தடையும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. காலை, மாலை, இரவு என்று 3 வேளையும் மின் தடை ஏற்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.வெயிலின் தாக்கம் காரணமாக தற்போது மின்சார தேவை அதிகரித்து உள்ள நிலையில் அதற்கு ஏற்ப மின் உற்பத்தி இல்லாததால் இந்த மின்தடை ஏற் பட்டு உள்ளது. காற்றாலை மூலம் கிடைத்து வந்த மின்சாரமும் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது இதுவும் மின்தடைக்கு ஒரு காரணமாக உள்ளது.

நேற்று முன்தினம் பகல், இரவு நேரங்களில் மின் தடை அதிகளவு காணப்பட்டது. நேற்றும் மின்சாரம் பல முறை தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையால் மக்கள் தூக்கமின்றி தவிக்கும் நிலை நிலவுகிறது.தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் இரவு மற்றும் அதிகாலையில் மாணவ, மாணவிகள் விழித்திருந்த தேர்வுக்காக படித்து வருகிறார்கள். இந்த மின்தடை காரணமாக அவர்கள் படிப்பு பாதிக்கப்படுவதால் அவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் காற்றாலை மின் உற்பத்தி அதிக அளவு இருக்கும். தற்போது காற்றாலையில் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. அதே போல தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் குமரி மாவட்டத்திற்கு வரும் மின்சாரத்தை சுழற்சி முறையில் வழங்கி வருகிறோம். இதனால் மின்தடை ஏற்படுகிறது. மின் உற்பத்தி சீரானதும் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.

DINADUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

8 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

8 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

8 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

8 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

9 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

9 hours ago