மகளின் காதலனை வெட்டிய நாம் தமிழர் கட்சி ஒன்றியச் செயலாளர்..!!

Published by
Dinasuvadu desk
மகளை காதல் திருமணம் செய்தவரையும்,  உறவினர்களையும் அரிவாளால் வெட்டி, மகளை கடத்திச் சென்றதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட 7 பேரை கன்னியாகுமரி போலீஸார்  தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரியை அருகே உள்ள  மயிலாடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். பெயின்டிங் கான்ட்ராக்டரான இவர், நாம் தமிழர் கட்சியின் அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டார்லின் (24) என்பவர் ஜெயபாலிடம்  வேலைபார்த்து வந்தார். ஸ்டார்லினுக்கும், ஜெயபாலின் மகள் டிக்சோனாவுக்கும் (22) இடையே காதல் ஏற்பட்டது. இதையறிந்த ஜெயபால் இருவரையும் கண்டித்துள்ளார். மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய  ஏற்பாடு செய்து வந்தார்.
கடந்த 10-ம் தேதி ஜெயபால் குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர்.  அப்போது, டிக்சோனா திடீரெனமாயமானார்.  பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. கன்னியாகுமரி போலீஸில் ஜெயபால் புகார் செய்தார்.டிக்சோனா, தனது காதலன் ஸ்டார்லினுடன் குலசேகரம் பகுதிக்கு சென்றுள்ளார். இருவரும் அங்கு திருமணம் செய்துள்ளனர். மணக்கோலத்தில் தாங்கள் இருக்கும் படத்தை வாட்ஸ்அப் மூலம் தங்களது உறவினர்கள் மற்றும் காவல் நிலையத்துக்கு அனுப்பியுள்ளனர்.

 
காரில் கடத்தல்
திருமணத்துக்குப் பிறகு, குளச்சலில் உள்ள ஸ்டார்லினின் உறவினர் வீட்டில் தங்கியிருந்த  காதல் தம்பதி, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்க முடிவு செய்து, நேற்று முன்தினம் மாலை காரில் தங்களது உறவினர்களுடன் புறப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயபால், தனது ஆதரவாளர்களுடன் 3 கார்களில் அவர்களை தேடிச் சென்றார்.
கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதியில் டிக்சோனாவும், ஸ்டார்லினும் வந்த காரை அவர்கள் விரட்டிச் சென்று வழிமறித்தனர். பின்னர், டிக்சோனாவை மட்டும் வலுக்கட்டாயமாக மற்றொரு காரில் ஏற்றிச் சென்றனர். இதைத் தடுக்க முயன்ற ஸ்டார்லின், அவரது உறவினர்கள் சுரேஷ், அருள் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டனர். படுகாயமடைந்த மூவரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஜெயபால் உட்பட 8 பேர் மீது கன்னியாகுமரி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் துரைராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றவர்களைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
DINASUVADU

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

22 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago