கன்னியாகுமரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தாழாக்குடி, வெள்ளமடம், செண்பகராமன் சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசு மாடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 35 வருடங்களுக்கு பிறகு தற்போழுது இப்பகுதியை சேர்ந்த பசு மாடுகள் மற்றும் கன்றுகளை கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பசுகள் மற்றும் கன்றுகள் இறந்திருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் அதிகமான மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் உள்ளது.
பசுகள் கோமாரி நோய் பாதிப்புக்குள்ளானதால் பால் உற்பத்தியும் பெரும் அளவு குறைந்துள்ளது. இதனால் கோமாரி நோயை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…