இந்திய மாணவர் சங்கம் போராட்டம் : நாகர்கோவிலில் பரபரப்பு…!!

Published by
Dinasuvadu desk

நாகர்கோவில்,
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு தமிழ்நாடு உயர்கல்வி மன்ற அறிவிப்புக்கு மாறாக மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்தியது. இதைக் கண்டித்தும், பல்வேறு வகைகளில் மாணவர்கள் மீது கல்வி கட்டண சுமையை ஏற்றுவதை கண்டித்தும், தமிழில் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் கல்லூரி மாணவ-மாணவிகள் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்றும் குமரி மாவட்டத்தில் சில கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அந்தந்த கல்லூரிகளின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
இந்திய மாணவர் சங்கத்தின் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கிளை சார்பில் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரியின் பிரதான நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜெஸின் தலைமை தாங்கினார். ஸ்ரீஜீ, சச்சின், பிரிஸ்கில், ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை கைகளில் பிடித்திருந்தனர்.
இதேபோல் நாகர்கோவில் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகள் அந்தந்த கல்லூரிகளில் இருந்து பேரணியாக புறப்பட்டு நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள தபால் நிலையத்துக்கு வந்தனர்.
அங்கு தபால் நிலைய வாசலில் அமர்ந்து தபால் அட்டைகளில் தங்களது கோரிக்கைகளை தனித்தனியாக எழுதி தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பினர்.ஒரே நேரத்தில் மாணவ- மாணவிகள் குவிந்ததால் தபால் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

22 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

22 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

22 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago