” மாணவி விபத்தில் பலி ” வாகனங்கள் கண்ணாடி உடைப்பு..!!

Published by
Dinasuvadu desk

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அருகே இன்று காலை மணல் லாரி மோதியதில் கல்லூரி மாணவி பரிதாபமாக பலியானார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 7 லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த ஆதனூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவரது மனைவி கண்மணி. ஊரப்பாக்கத்தில் ஒரு தனியார் பள்ளியில் கண்மணி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சரண்யா (எ) சூலமெட்டி சேரன், கிருபா (19) என்ற 2 மகள்கள். இவர் கிண்டியில் உள்ள கல்லூரியில் பிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் ஆதனூரில் இருந்து ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சைக்கிளில் வந்து, அங்கிருந்து ரயில் மூலம் கல்லூரிக்கு செல்வார்.

இன்று காலை 7.30 மணியளவில் வழக்கம்போல், ஆதனூரில் இருந்து சரண்யா சைக்கிளில் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். மண்ணிவாக்கம், அண்ணாநகர் அருகே சென்றபோது, பின்னால் வந்த டாரஸ் லாரி சரண்யா சைக்கிள் மீது வேகமாக மோதியது.இதில் சரண்யா சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு, லாரி சக்கரத்துக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இதை பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், டாரஸ் லாரியின் கண்ணாடியை அடித்து நொறுக்கி, லாரி டிரைவரை சரமாரியாகத் தாக்கி, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Image result for வாகனங்கள் கண்ணாடி உடைப்புபின்னர், விபத்தை ஏற்படுத்திய லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே, அங்கிருந்த ஓட்டேரி போலீசார் பொதுமக்களை சமரசப்படுத்தினர். பின்னர், மாணவி சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பினர்.  புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  தொடர்ந்து அவ்வழியாக லாரி வந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், 6க்கும் மேற்பட்ட லாரிகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

DINASUVADU

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

9 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

17 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago