காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.! 

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த மாதம் ஜூலை 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை டோக்கன், விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு 24ஆம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குடும்பத்தலைவிகளிடம் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளில் பெறப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். […]

3 Min Read
Tamilnadu CM MK Stalin

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்.!

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

4 Min Read
rain tn

3 பட்டாசு ஆலைகள் இயங்க தடை – காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

காஞ்சிபுரத்தில் 3 பட்டாசு ஆலைகள் தற்காலிகமாக இயங்க தடை விதித்து காஞ்சிபுர ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 13-ற்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் […]

3 Min Read
Default Image

பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களிடம் அமைச்சர் நலம் விசாரிப்பு..!

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நலம் விசாரிப்பு. காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். முன்னதாக இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில் தற்பொழுது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த […]

3 Min Read
Default Image

#Breaking : காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..! பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு..!

காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு. காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 15 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பட்டாசு ஆலையில் மீட்கும் பணியிலும் […]

2 Min Read
Default Image

#Breaking: காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..! ஒருவர் பலி, 15 ற்கும் மேற்பட்டோர் காயம்..!

காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.  காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 15 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பட்டாசு ஆலையில் மீட்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களை போலீசார் […]

2 Min Read
Default Image

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார. திங்கள்கிழமை பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், அதற்காக ஆயுத்த பணிகளை மேற்கொள்வதற்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் விளக்கமளித்துள்ளார். முன்னதாக நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரவில் மாற்றம் செய்து அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் […]

2 Min Read
Default Image

பரந்தூர் போராட்டம் 200வது நாள்… 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்தும் போராட்டம் இன்று 200வது நாளை எட்டியுள்ளது. அதனால் ஆயிரகணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் கிராம பகுதியில் மீனம்பாக்கத்தை அடுத்து ஓர் பெரிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்தது . இதற்காக, பரந்தூர் கிராமத்தை சுற்றி 13 கிராம பகுதியில் இருந்து 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு தீர்மானித்து அதற்கான […]

4 Min Read
Default Image

நரிக்குறவர் பெண்கள் உற்பத்தி செய்யும் விற்பனை மையத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்பூதூர் பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நரிக்குறவ பெண்கள் பயன்பெறும் வகையில் விற்பனை மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள பூ மார்க்கெட் வணிக வளாகத்தில் நரிக்குறவர்கள் இன பெண்கள் பயன்பெரும் வகையில் ஓர் விற்பனை மையம் அமைக்கப்பட்டது. இந்த விற்பனை மையம் மூலம் நரிக்குறவ பெண்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படும். நரிக்குறவ பெண்களுக்கான விற்பனை மையம் : நரிக்குறவர் சுய […]

3 Min Read
Default Image

நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். புதன்கிழமை பாடப்பிரிவை பின்பற்றி நாளை பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
Default Image

காஞ்சிபுரத்தில் கத்தி முனையில் கல்லூரி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.! 4 பேர் தப்பியோட்டம்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி பெண்ணை 4 பேர் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏனாத்தூர் எனும் ஊர் அருகே குண்டு குளம் எனும் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த 4 நபர்கள் , வந்திருந்த இருவரையும் கத்தி முனையில் மிரட்டி, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி […]

2 Min Read
Default Image

காஞ்சிபுரம் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்து.! 5 டன் பொருட்கள் எரிந்து நாசம்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பிளாஸ்டிக் குடோன் தீப்பிடித்து அதில் 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.   காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்துள்ளது. இந்த தீ விபத்தில் இதுவரை 5 டன்னிற்கு அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன. இந்த தீ விபத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.    

2 Min Read
Default Image

உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர் பலி..!

உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சூர்யா(20) என்ற இளைஞர் பால் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் தனது உடல் எடையை குறைக்க விரும்பியுள்ளார். இதனால்,  சூர்யா உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகி மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளார். இந்த மருந்தை சாப்பிட்ட இளைஞர் சூர்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

2 Min Read
Default Image

கரையோர மக்கள் கவனத்திற்கு.! செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3000 கனஅடி நீர் வெளியேற்றம்.!

செம்பரம்பாக்கம் ஏரியில் 5 கண் மதகுகளில் 3 ஷட்டர்களிம் வழியாக 3000 கனஅடி நீர் வெளியேறி வருகிறது. கனமழை காரணமாக வடதமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால், ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வருவதை பொறுத்து 100 கனஅடி நீர் திறக்க தொடங்கியது இன்று காலை 1000 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், தற்போது  செம்பரம்பாக்கம் ஏரிக்கு 4297 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 3645  கனஅடி நீர் கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, தற்போது […]

Chembarambakkam Lake 3 Min Read
Default Image

#Breaking : காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அரைநாள் விடுமுறை.! பள்ளிகளுக்கு மட்டும்.!

தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை. – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மதியத்திற்கு பின் அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.

- 2 Min Read
Default Image

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பை மேலும் அதிகரிக்க முடிவு..!

செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து உயர்ந்து வருவதால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்காங்கே உள்ள அணைகள் ஏரிகள் நிரம்பி வழிந்து வருகிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து உயர்ந்து வருவதால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காலை 9 மணி முதல் வினாடிக்கு […]

- 2 Min Read
Default Image

செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கனஅடி நீர் வெளியேற்றம்.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….

காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  மாண்டஸ் புயல் ஆய்ந்து ஓய்ந்த பிறகும் அதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது வடதமிழகத்தில் அங்கங்கே மழைபெய்து வந்ததால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால்ஆரம்பகட்டத்தில் 100 கனஅடி நீர் வீதம் திறக்கப்பட்டு தற்போது அது அதிகரித்து வருகிறது . அதன்படி, தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 1000கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.    இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   […]

- 2 Min Read
Default Image

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! இந்தந்த பகுதிகளுக்கு மட்டும் தான்!

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று, ராணிப்பேட்டையில் மாவட்டத்தில் கனமழை காரணமாக நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு, காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு […]

#TNRain 2 Min Read
Default Image

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றம்.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் உள்ள 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மாண்டஸ் புயல் கரையை கடந்து வருவதால் பெரும்பாலான வடதமிழக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. அதன் முழு கொள்ளளவான 24 அடியில் , 20 அடியை தூண்டியுள்ளது. 2,695 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மேலும் மழை […]

- 3 Min Read
Default Image

#RedAlert: தமிழகத்தை நெருங்கும் மாண்டஸ்! 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால் இன்று 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பிஅய்க்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]

CycloneMandous 3 Min Read
Default Image