ஈரோட்டில் காவல்துறை உதவி ஆய்வாளரை தாக்கிய 6 பேர் கைது!

Default Image

ஈரோட்டில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்றபோது, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, முரளி மற்றும் வாசுதேவன் ஆகிய இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தடுக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தனை, முரளி தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில், அவர் காயமடைந்தார். இதுதொடர்பாக, முரளி தரப்பைச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். .இதேபோன்று, கோயிலில் தகராறில் ஈடுபட்டதாக வாசுதேவன் தரப்பைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோட்டில், காவல்துறையினரை தாக்கியதாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்