ரசாயனம் கலக்கப்பட்ட 2,300 கிலோ வெல்லம் பறிமுதல்

Default Image

ஈரோடு அருகே வெல்லம் விற்பனை மையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகரிகள் நடத்திய சோதனையில் ரசாயனம் கலக்கப்பட்ட 2 ஆயிரத்து 300 கிலோ வெல்லம், அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோட்டை அடுத்துள்ள சித்தோடு பகுதியில் செயல்பட்டு வரும் வெல்லம் விற்பனை மையத்தில், தமிழக வியபாரிகள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வெல்லம் கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி மற்றும் அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் ரசாயனம் கலக்கப்பட்ட வெல்லம் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, ரசாயனம் கலக்கப்பட்ட 2 ஆயிரத்து 300 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. ரசாயன கலப்படத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு தொடர உள்ளதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்