பவானிசாகர் அணையில் இருந்து மேலும் 15 நாட்களுக்கு நீர் திறப்பு…!!

Default Image

பவானிசாகர் அணையில் இருந்து மேலும் 15 நாட்களுக்கு கூடுதலாக நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப்படை மதகுகள் வழியாக விநாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கடைமடைப்பகுதியில் நெற்பயிர்கள் களையெடுக்கும் பருவத்தில் இருப்பதால் டிசம்பர் மாத இறுதி வரை நீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து,மேலும் 15 நாட்களுக்கு நீர் திறப்பு நீட்டிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்