பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்பட உள்ள கரும்புகளை கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக ஈரோடு மாவட்ட கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள விளை நிலங்களில் சுமார் 300 ஏக்கரில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் கரும்புகள் தரமாகவும், தித்திப்பாகவும் இருக்கும் என்பதால் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. 400 கரும்புகள் கொண்ட வண்டிக் கரும்பை, வியாபாரிகள் 7 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி கொள்முதல் செய்வதாக கூறும் விவசாயிகள், ஆனால் பொங்கல் பரிசு பொருட்களுடன் வழங்குவதற்காக கரும்புகளை கொள்முதல் செய்ய வரும் அதிகாரிகள், 400 கரும்புகளை 6 ஆயிரம் ரூபாய்க்கு கேட்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கரும்பு 6 அடி நீளத்துக்கு ஒரே சீராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் முன் வைக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் வியாபாரிகளும் குறைந்த விலைக்கே தற்போது கரும்புகளை கேட்பதாக தெரிவித்துள்ள விவசாயிகள், பெரும் விவசாயிகள் பக்கம் மட்டுமே அதிகாரிகள் பார்வை இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
source: dinasuvadu.com
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…