Categories: ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கரும்புகளை கொள்முதல் செய்வதில பாரபட்சம்!கரும்பு விவசாயிகள் வேதனை…….

Published by
Venu

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்பட உள்ள கரும்புகளை கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக ஈரோடு மாவட்ட கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள விளை நிலங்களில் சுமார் 300 ஏக்கரில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் கரும்புகள் தரமாகவும், தித்திப்பாகவும் இருக்கும் என்பதால் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. 400 கரும்புகள் கொண்ட வண்டிக் கரும்பை, வியாபாரிகள் 7 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி கொள்முதல் செய்வதாக கூறும் விவசாயிகள், ஆனால் பொங்கல் பரிசு பொருட்களுடன் வழங்குவதற்காக கரும்புகளை கொள்முதல் செய்ய வரும் அதிகாரிகள், 400 கரும்புகளை 6 ஆயிரம் ரூபாய்க்கு கேட்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கரும்பு 6 அடி நீளத்துக்கு ஒரே சீராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் முன் வைக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் வியாபாரிகளும் குறைந்த விலைக்கே தற்போது கரும்புகளை கேட்பதாக தெரிவித்துள்ள விவசாயிகள், பெரும் விவசாயிகள் பக்கம் மட்டுமே அதிகாரிகள் பார்வை இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
source: dinasuvadu.com

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

22 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

35 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

46 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

53 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago