திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் சுற்றுள்ள பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் .இதனால் மோதல்கள் அதிகமாக உள்ளது .எனவே கொடைக்கானல் பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு பாதுகாப்பு கருதி டூவீலர்களில் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்தத் தடை இன்று முதல் அமலாகிறது. சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் மோயர் பாயிண்ட், பைன் ஃபாரஸ்ட், குணா குகை, தூண்பாறை ஆகிய இடங்கள் வனப் பகுதியில் உள்ளன. இப்பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இடங்களை கண்டு ரசிக்க இதுவரையில் இரு சக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனத்திலும் சுற்றுலாப்பயணிகள் சென்று வந்தனர்.
இப்பகுதியில் அண்மைக்காலமாக காட்டெருமையின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதுதவிர, மனிதர் – விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மோதல்களில் அதிகமாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே இன்று முதல் வனப் பகுதிகளில் இருக்கும் சுற்றுலாத்தலங்களைக் காண பாதுகாப்புக் கருதி இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது என வனத்துறை தெரிவித்துள்ளது.
source: dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…