கொடைக்கானல் அருகேயுள்ள செம்பரான்குளம் பகுதியில் தனியார் தோட்டத்தில் காட்டெருமைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில், உதவி வனபாதுகாவலர் பாலகிருஷ்ணன், வனச்சரகர் கருப்பையா, தாசில்தார் பாஸ்யம் ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த தோட்டத்தில் சந்தேகப்படும்படியான இடங்களை வனஊழியர்கள் தோண்டினர்.
அங்கு 3 காட்டெருமைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவற்றின் உடல்கள் எலும்பு கூடாக மாறி இருந்தது. இதைத் தொடர்ந்து கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் ஹக்கீம், டாக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள், அவற்றை பரிசோதனை செய்தனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
செம்பரான்குளம் பகுதியில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் சத்தியசீலன் என்பவருடைய தோட்டத்தில் காட்டெருமைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று சோதனை நடத்தினோம். 3 காட்டெருமைகளின் தலைகள், உடல் பாகங்கள் எலும்புகள் புதைக்கப்பட்டு இருந்ததை தோண்டி எடுத்துள்ளோம்.
இதுதொடர்பாக அந்த தோட்டத்தின் மேற்பார்வையாளராக இருந்த கே.சி.பட்டியை சேர்ந்த கதிரேசன் (வயது 40), தஞ்சாவூர் மாவட்டம், கோவிலூரை சேர்ந்த சிவலிங்கம் (60) ஆகியோரை கைது செய்துள்ளோம். மேலும் பலரை தேடி வருகிறோம். இந்த காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து தோட்டத்திற்குள் புகுந்த போது மின்வேலியில் சிக்கி பலியானதா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தனியார் தோட்டத்தில் புதைக்கப்பட்டு இருந்த 3 காட்டெருமைகளின் உடல் தோண்டி எடுத்த சம்பவத்தால் கொடைக்கானல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…