திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள நத்தம்மாடிபட்டியில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 300 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடி வீரர்களுக்கு பிடியில் சிக்காமல் மாடுகள் துள்ளிச் சென்றன. காளைகளை அடிக்கிய மாடுபிடிவீரர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டு வருகின்றது.
அதே போல் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது. சைக்கிள், அண்டா, தங்க காசுகள், கட்டில், பீரோ என 2 இலட்சம் ரூபாய் வரையிலான பரிசுகள் வழங்கபட்டன. பாதுகாப்பிற்க்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்ட மருத்துவ உதவி குழுவினர் 10 மேற்ப்பட்ட தீயணைப்பு வீரர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடி கிராமத்தில் 167-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது, இதில் 200 காளைகளும் 150 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.
திருச்சி, மணப்பாறை, அரியலூர், மீன்சுருட்டி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் வெற்றி பெரும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், தங்க காசு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. .
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…