[FIle Image]
பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால் நேற்றும் கடலூரில் இரவு நேர பேருந்து நிறுத்தப்பட்டது.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிக்காக கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி பகுதியில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணியானது நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் , அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தின் போது கடலூர் சுற்றுவட்டார் பகுதிகளில் சுமார் 15 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.
இதனால் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க கடலூர் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடலூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் ஒரு சில இரவு நேர உள்ளூர் பேருந்து சேவையும் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்றும் இதேபோல் சில இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதால் நேற்று இரவும் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் இரவு நேர உள்ளூர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…