Cuddalore govt hospital [Image source : cuddaloreonline.in]
கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக மனைவி பாதிக்கப்பட்டதாக கணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி பத்மாவதிக்கு கடந்த 2022 செப்டம்பரில், கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்கப்பட்டதால் அதன் பிறகு வயிறு வலி காரணமாக அடிக்கடி மருத்துவமனை சென்று வந்துள்ளார்.
அதன்பிறகு, கடலூர் ஜிப்மர் மருத்துவனையில் பரிசோதனை செய்த போது பிரசவ அறுவை சிகிச்சையின் போது கருப்பபையுடன் குடலையும் சேர்த்து தைத்தது தெரியவந்தது. இதனை அடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் வெங்கடேசன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மருத்துவ அறிக்கை வேண்டும் என அரசு மருத்துவர்களிடம் ஆட்சியர் கேட்டுள்ளார்.
ஆனால், தற்போது வரையில் அரசு மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும், இதுகுறித்து ஆட்சியரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி, இன்று கடலூர் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்துடன் வந்த வெங்கடேசன் கூட்டாக தீக்குளிக்க முயன்றார். மேலும் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் உடல் உறுப்புகளை தனமாக எடுத்துக்கொள்ளுங்கள் என உருக்கமாக கூறினார். உடனே அங்கிருந்த போலீசார் இந்த சம்பவத்தை தடுத்தி நிறுத்தி வெங்கேசன் குடும்பத்தாரிடம் பேசுவரத்தை நடத்தி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…