யானைகள் புத்துணர்ச்சி முகாமில் மின்விளக்குகளாலான தோரணம்

Default Image

தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாமில் காட்டு யானைகள் வராமல் தடுக்க மின்விளக்கு தோரணங்களால் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றங்கரையோரத்தில் தேக்கம்பட்டி என்னுமிடத்தில் ஏழாவது ஆண்டாக யானைகள் புத்துணர்ச்சி முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த பதினான்காம் தேதி துவங்கி, வரும் ஜனவரி முப்பதாம் தேதி வரை நாற்பத்தெட்டு நாட்கள் நடைபெறும் இம்முகாமில் 28 யானைகள் பங்கேற்றுள்ளன.
இந்தநிலையில், புத்துணர்ச்சி முகாமில் உள்ள கோவில் யானைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான குண்டு பல்புகளை பயன்படுத்தி முகாமை சுற்றி பல கிலோமீட்டர் நீளத்திற்கு மின்விளக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்