புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்புத் தொழுகை…!!

Default Image

கோயம்புத்தூர் அத்தார் பள்ளிவாசலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளி வாசலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு தொழுகை செய்யப்பட்டது. தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் நிதி உதவியும் செய்தனர்.5 லட்ச ரூபாய் மதிப்பிலான அரிசி,பாய் , போர்வை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வேதாரண்யம் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றனர்.புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் , இது போன்ற இன்னல்கள் வரும் நாட்களில் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டதாக தொழுகையில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்