தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற காதலித்த பெண்ணை மருத்துமனையில் வைத்து தாலி கட்டிய மகன்!

Default Image

சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த 60 வயது ஆகிய சுதீஷ் என்பவருக்கு, மல்லிகா எனும் மனைவியும், பிரகாஷ், சரவணன் மற்றும் சதிஷ் என மூன்று மகன்களும் உள்ளனர். சுதீஷ் வெல்டராக பணியாற்றி வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக சுதீஷ் அபிணிமுடிந்து வீடு திரும்புகையில், எதிரே வந்த சரக்கு சரக்கு ரயில் மோதியதால், அடிபட்டு இடுப்புக்கு கீழுள்ள பெரும்பாலான பகுதிகள் நீக்கப்பட்டு மரணப்படுக்கையில் உள்ளார்.
இந்நிலையில், மரணப்படுக்கையில் கிடக்கு சுதீஷ் தன் மகனின் திருமணத்தை பார்க்க வேண்டும் என ஆசை பட்டதால், அவரது மகன் சதிஷ் தான் காதலித்த பெண்ணை இருவீட்டார் சம்மதத்துடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு தாலி காட்டினார்கள். அதன் பின்பு தந்தை சுதீஷிடம் சென்று ஜோடியாக ஆசியும் பெற்றனர். தங்கள் தந்தை விரைவில் குணமடைய வேண்டும் எனவும் கடவுளை பிரதிப்பதாக அனைவர் முன்பும் அவர் கூறி செய்த இந்த செயலால் அங்கு இருந்த மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்