மகா விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்.! சைதை நீதிமன்றம் உத்தரவு.! 

அரசுப்பள்ளியில் சர்ச்சையாக பேசியதாக கைதாகியுள்ள மகா விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் விசாரணை காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Maha vishnu - Saidapet court

சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆன்மீகம், முன்ஜென்மம் பற்றியும், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சை கருத்துக்களையும் மகா விஷ்ணு என்பவர் பேசியிருந்தார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகா விஷ்ணு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் மகா விஷ்ணு மீது புகார் அளித்திருந்தார். இப்புகாரின் பெயரில் மகா விஷ்ணுவை கடந்த 7ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து சைதாப்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருந்த மகா விஷ்ணு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். அவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சைதாபேட்டை காவல்துறையினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், நீதிமன்றம், மகா விஷ்ணுவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து மகா விஷ்ணு 3 நாள் காவலில் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 25032024
manoj bharathiraja rip
PBKSvGT
Manoj Bharathiraja
eps - Annamalai
GT vs PBKS
Avesh Khan