சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்று வரும் 384-வது சென்னை தின கொண்டாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சென்னை பள்ளி மாணவர்களின் “அக்கம் பக்கம்” புகைப்படக் கண்காட்சியையும், “தி இந்து” குழுமத்தின் சார்பில் ஆவணப் புகைப்படங்களின் கண்காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டு வருகிறார்.
சென்னையின் புகழ்பெற்ற இடங்கள், நிகழ்வுகள் என கருப்பு, வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மேலும், “தி இந்து” குழுமத்தின் சார்பில் எபிக் சாகா ஆப் தி சோழாஸ் உள்ளிட்ட 3 புத்தகங்களையும் முதலமைச்சர் வெளியிட்டார். இதனிடையே, சென்னை தின கொண்டாட்டத்தை ஒட்டி பாண்டி பஜாரில் உணவு திருவிழா திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.
1996ம் ஆண்டு ஜூலை 17-ல் கலைஞர் தலைமையிலான அரசு மெட்ராஸ் என்கிற பெயரை சென்னை என்று அதிகாரப்பூர்வ பெயராக மாற்றியது. 2004-ல் சென்னை தின கொண்டாட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் ஆக.22ல் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…