335 சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்….ஏ.கே.விஸ்வநாதன் தகவல்…!!

Default Image

சென்னை உள்ள 335 சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் சென்னையில் உள்ள கதீட்ரல் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் எல்டாம்ஸ் சாலைகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 446 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். மேலும், குற்றச் சம்பவங்கள் நடைபெற்ற இடத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளதா என்பதை செல்போன் மூலம் தெரிந்துகொள்ளும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய ஆணையர் விஸ்வநாதன், சென்னை உள்ள 335 சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் சாலைகளில் விதிமுறைகளை மீறுபவர்களின் வாகன எண் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்