ரூபாய் 6 லட்சம் சென்னையில் இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை! தப்பி ஓடிய கொள்ளையனை பிடித்து போலீசார் விசாரணை

Default Image

இந்தியன் வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கபட்டது .

சென்னை அடையார் பகுதியில் அமைத்துள்ள இந்தியன் வங்கியின் உள்ளே முகமுடியுடன் நுழைந்த மர்ம நபர், பணம் செலுத்தும் இடத்திற்கு சென்று, அங்கே வரிசையில் நின்ற ஒருவரிடம், தன் கையில் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டினார். வங்கியில் பணம் செலுத்த நின்றவரின் கையில் இருந்த 6 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓடினார்.

உடனடியாக வங்கியில் இருந்த பொதுமக்களும், வங்கி பாதுகாப்பில் இருந்த பாதுகாவலரும் அந்த திருடனை விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் பட்ட பகலில் வங்கியில் நுழைந்து, துப்பாக்கி முனையில் கொள்ளையை அடிக்க பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்