சென்னை எம்.கே.பி. நகர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர், உயிரிழந்த சம்பவம்அப்பகுதியில் பதற்றத்தைஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களைதவிர்க்கும் விதமாக காவல்நிலையத்திற்குபலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சோழவரம் அருகே சாலமன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டப்பட்டு வந்த கார்த்திக், சொந்த ஊரான திருவாரூரில் தங்கி பணி புரிந்த வந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு தங்கை திருமணத்திற்காக சென்னை வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் மற்றும் அவரது நண்பர் அருண்பாண்டியன் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்களிடம் கத்தி இருந்ததால், அவர்களை எம்.கே,பி. நகர் காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தலைமறைவாக இருந்த கார்த்திக் சென்னை வந்தது தெரிந்தவுடன் அவரை விசாரணை செய்ய அழைத்து வந்ததாகவும், அப்போது அவர் மதுப்போதையில் இருந்ததால் உடல் நிலை சரியில்லாமல் இறந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினரின் விளக்கத்தை மறுத்துள்ள கார்த்திக்கின் உறவினர்கள், கடந்த ஒராண்டாக அமைதியாக இருந்து வந்த கார்த்திக்கை விசாரணை என்ற பெயரில் அடித்து கொன்று விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், போலீசாரை கண்டித்து அம்பேத்கர் சட்ட கல்லூரி அருகே கார்த்திக்கின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போலீசார், நடத்திய சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக எம்.கே.பி. நகர் காவல்நிலையத்தைச் சுற்றி 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
DINASUVADU
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…