சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை! பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை!

Default Image

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், சென்னையில் பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென  எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு,  பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை இடையூறு போன்ற காரணங்களால் சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை, கருணாநிதி நுழைவுவாயில் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்,  போராட்டங்கள் நடத்த கடந்த 2012-ஆம் ஆண்டே தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.இந்த தடையை மீறியும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பனகல் மாளிகை அருகே போராட்டங்கள் அறிவித்து வருவதாகவும்,  தடை செய்யப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்த முயற்சிப்பவர்கள், கைது செய்யப்பட்டு, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்