சென்னை திருவையாறு நிகழ்ச்சியை முதலமைச்சர் துவக்கி வைத்தார்

Default Image

சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி பஞ்சரத்ன கீர்த்தனையுடன் கோலாகலமாக தொடங்கியது.கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு, தஞ்சை மாவட்டம் திருவையாறில், இசைக் கலைஞர்களால் ஆண்டுதோறும் இசையஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியாதவர்களுக்காக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், சென்னையில் திருவையாறு என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி பஞ்சரத்ன கீர்த்தனையுடன் துவங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விழாவினை துவக்கி வைத்தார். வரும் 25 ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்