Categories: சென்னை

சென்னையில் 27 இடங்களில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி!

Published by
Venu

சென்னையில் வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம், ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 27 இடங்களில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதியளிதுள்ளது.

பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்றும்  தடை செய்யப்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்தினால் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.போராட்டத்தில் ஈடுபடும் கட்சி, அமைப்புகளின் வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும்  என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

வழக்கு விவரம் :

காவிரி பிரச்னை, விவசாயிகள் பிரச்சனைக்காக தொடர்ந்து போராடி வருபவர்  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு. இவர் டெல்லியில் 40 நாட்கள் நடத்திய போராட்டம் வித்தியாசமானது. இப்போது சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம்  நடத்த அனுமதியளிக்கும்படி போலீசாரிடம் மனு அளித்துள்ளார்.  இதற்கு போலீசார் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அய்யாகண்ணு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி  சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி’  மனுத்தாக்கல் செய்தார்.

கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி  காவிரி விவகாரத்தைவிட மெரினாதான் தமிழக அரசுக்கு முக்கியமா? என்று  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

போராட்டத்தை ஒழுங்கு படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது, போராட்டத்தை தடுக்க அதிகாரமில்லை என்றும்  மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரும் அய்யாக்கண்ணு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைத்தது  சென்னை உயர்நீதிமன்றம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

13 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

32 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

44 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

48 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

1 hour ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago