சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! போக்சோ சட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுனர் கைது!

Default Image

போக்சோ சட்டத்தின் கீழ், சென்னை திருநின்றவூர் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பினி ஆக்கிய ஆட்டோ ஓட்டுனரை போலிசார் கைது செய்தனர்.

திருநின்றவூர் நெமிளிச்சேரி ரயில் நிலையம் பகுதியில் டீ கடை நடத்தி வரும் பெண் ஒருவர், உடல் நிலை சரியில்லாத தன்னுடைய 12 வயது மகளுக்கு ஜூஸ் வாங்கி அதனை ஆட்டோ ஓட்டுனர் பரமசிவத்திடம் கொடுத்தனுப்பியுள்ளார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பரமசிவன், ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சில நாட்கள் கழித்து சிறுமியை மிரட்டி மீண்டும் வன்புணர்வு செய்துள்ளான்.

வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் பரிசோதித்தபோது, 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆட்டோ ஓட்டுனர் பரமசிவன் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டது விசாரணையில் தெரியவந்ததையடுத்து திருநின்றவூர் போலிசார் பரமசிவனை, POCSO சட்டத்தில் கைதுசெய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்