சென்னையில் மகளிர் தங்கும் விடுதி நடத்திவந்த வயதான கணவன் – மனைவி, கட்டையால் அடித்துக் கொலை!

Published by
Venu

மகளிர் தங்கும் விடுதி சென்னையில் நடத்திவந்த வயதான கணவன் – மனைவி, கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொட்டிவாக்கத்தில், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பணிக்குச் செல்லும் மகளிருக்கான தங்கும் விடுதி செயல்படுகிறது. இதன் உரிமையாளரான மாயாண்டி என்ற முதியவரும், அவரது மனைவி வள்ளிநாயகியும் அங்கு 3-ஆம் தளத்தில் வசித்தனர். இவர்களது மகள் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில், மகன் ஸ்ரீஹரீஷ் மேடவாக்கத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

நேற்று வழக்கம்போல பணிக்குச் சென்று வந்த ஸ்ரீஹரீஷ், வீட்டில் தாயும், தந்தையும் பின்தலையில் அடிபட்டு, ரத்தவெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். தகவலின்பேரில் வந்த துரைப்பாக்கம் போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார்.

நெல்லை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட மாயாண்டி – வள்ளிநாயகி தம்பதி, ஏராளமான சொத்துக்களின் உரிமையாளர்கள் ஆவர். இவர்கள் கொல்லப்பட்டது, ஆதாயத்துக்காகவா, முன்விரோதமா என்ற கோணத்தில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் ஸ்ரீஹரீஷ் மற்றும் அந்த விடுதியில் வசிப்பவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். போலீசாரின் மோப்ப நாய் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது.

கட்டையால் பலமாக அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக உறுதி செய்துள்ள போலீசார், சம்பவ இடத்தில் ரத்தம் உறைந்து கிடந்ததால், கொலை பிற்பகலிலேயே நடந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர். விடுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விடுதியில் தங்கியிருந்த அனைவரும் காலி செய்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

2016 -ஆம் ஆண்டு பள்ளிக்கரணையில் வயதான மூதாட்டியும், பேத்தியும் கழுத்தறுத்து கொல்லப்பட்டு நகைகள் கொள்ளை போன வழக்கில், இதுவரை கொலையாளிகள் பிடிபடவில்லை. இந்நிலையில், சென்னையில் மேலும் ஒரு இரட்டைகொலை அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

5 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

23 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

23 hours ago