சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் தப்பாட்டையை அடித்துக்கொண்டு இயற்கை பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் வளர்மதி மற்றும் 5 பேர் கேரளாவுக்கு நிவாரண நிதி திரட்டிக்கொண்டிருந்தனர். இந்தத் தகவல் கிடைத்ததும் நுண்ணறிவு பிரிவு (ஐ.எஸ்) காவலர் ஸ்டாலின், அங்கு வந்தார். அவர், தன்னுடைய செல்போனில் அவர்களை போட்டோ பிடித்துள்ளார். இதற்கு வளர்மதியுடன் வந்தவர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு காவலர் ஸ்டாலின் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் பெரியமேடு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்து, வளர்மதி மற்றும் அவருடன் இருந்த 5 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தி, 6 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.அவர்களை அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து வளர்மதி உள்ளிட்ட 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.வளர்மதி பெண்கள் சிறையில் இந்த கைது நடவடிக்கைக்கு காரணமான காவலர் ஸ்டாலின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேற்று உண்ணாவிரதம் போராட்டத்தை சிறையில் தொடங்கினார்.நேற்றே சிறை அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கூறினர்.ஆனாலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றார்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…