ஆர்.கே.நகர் தேர்தலில் டோக்கன் வழங்கிய 4 பேர் கைது !

Default Image

தேர்தல் முடிந்தாலும் இன்னும் பரபரப்பான தொகுதியாகவே இருந்து வருகிறது ஆர்.கே.நகர் தொகுதி. கொருக்குபேட்டையில் 20 ரூபாய் டோக்கன் மூலம் 450 பேருக்கு பணம் பட்டுவாடா செய்ததாக டிடிவி ஆதரவாளர்கள் 4 பேரை ஆதாரத்துடன் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆர்.கே.நகருக்கு உட்பட்ட கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகரில் ஜான் பீட்டர் என்பவரிடம் தகராறில் ஈடுபட்ட சிலர் 20 ரூபாய் நோட்டை கொடுத்து பணம் தருவதாக வாக்குறுதி அளித்தது போல், தேர்தல் முடிவு வந்த பின்னர் பணம் தரவில்லை என கேட்டதாக கூறப்படுகிறது.

இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ள, விசாரணை நடத்திய ஆர்.கே. நகர் போலீசார், ஓட்டுக்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டவர்களிடம் புகார் பெற்று பணம் பட்டுவாடா செய்ததாக டிடிவி தினகரன் ஆதரவாளர்களான ஜான் பீட்டர், சரண் ராஜ், செல்வம் மற்றும் ரவி ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 இருபது ரூபாய் நோட்டுகள், 450 பேருக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்ததற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஓட்டுக்கு பணம் கேட்டு மிரட்டுவதாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் முதலில் புகார் கொடுத்திருந்தும், அதில் நடவடிக்கை எடுக்காமல் அவர்கள் மீது கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட வழக்குகளோடு, தேர்தல் விதிகளை மீறி பணம் பட்டுவாடா செய்ததாக தேர்தல் முடிந்த பிறகு வழக்குப் பதிவு செய்துள்ளனர் ஆர்.கே.நகர் போலீசார். பணம் கொடுத்ததாக தங்களது ஆதரவாளர்களை கைது செய்துள்ள போலீசார், பணம் கேட்டு தகராறு செய்தவர்களை ஏன் கைது செய்யவில்லை என டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர்..

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்