பார்வையாளர்களை வியக்க வைத்த அரியலூர் ஜல்லிக்கட்டு

Default Image

அரியலூர் மாவட்டம் சிங்கராயபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு பிறகும், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அரியலூர் மாவட்டம் சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை அதிமுக தலைமை கொறடா ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட காளைகளும் 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சீறிப்பாயும் காளைகளை, காளையர்கள் அடக்கும் காட்சி பார்வையாளர்களை மெய் சிலிர்க்கச் செய்தது. போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் காளையர்களுக்கு பரிகள் வழங்கப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்