அடடே !குறைந்த செலவில் சட்டென ஒரு ஸ்னாக்ஸா ..!

Published by
K Palaniammal

கார கடலை – நம் அனைவரது சமையலறையிலும் உள்ள ஒரு முக்கியமான உணவுப்பொருள் கடலைப்பருப்பு. இந்த கடலைப் பருப்பைக் கொண்டு பருப்பு வடை செய்யவும் பல வகை தாளிப்புகளிலேயே பயன்படுகிறது. அது மட்டுமில்லாமல் சரும பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய பொருளாக இந்த கடலைப்பருப்பு உள்ளது. இந்த கடலைப் பருப்பை வைத்து மொறு மொறுவென காரக்கடலை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கடலை பருப்பு =250 கி
  • பூண்டு =10 பள்ளு
  • எண்ணெய் =தேவையான அளவு
  • பெருங்காயம் =அரா ஸ்பூன்
  • கறிவேப்பிலை =சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • மிளகாய் தூள் =1 ஸ்பூன்

செய்முறை
கடலைப்பருப்பை கழுவி இரண்டு மணி நேரம் ஊரை வைத்து வடிகட்டி நிழலில் உலர்த்தி காய வைக்க வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான எண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பை சல்லடை கரண்டியில் பொரித்து எடுக்க வேண்டும், இது மிகவும் எளிதாகவும் எடுப்பதற்கு சுலபமாகவும் அனைத்து பகுதிகளும் சமமாக வெந்து வரும். ஆகவே இந்த முறையை பயன்படுத்தி பொரித்து எடுத்து வைக்கவும்.

பிறகு அதே சல்லடையில் பூண்டை தோல் நீக்காமல் தட்டி பொரித்து எடுத்து அந்த கடலை பருப்பிலே சேர்க்கவும். திரும்பவும் அதே சல்லடையில் கருவேப்பிலையும் பொரித்து  எடுத்து கடலைப்பருப்பில்   சேர்க்கவும். கடலைப்பருப்புக்கு தேவையான உப்பும் ,உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூளும், பெருங்காயத்தூளும் சேர்த்து கிளறி விடவும் .இப்போது சுவையான மொறு மொறுவென காரக்கடலை பருப்பு ரெடி.

நன்மைகள் 

வளரும் குழந்தைகளுக்கு கடலைப்பருப்பு தினமும் ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சேர்த்து வந்தால் பல நோய்கள் நம்மை நெருங்காது. வளரிளம் குழந்தைகளுக்கு தசை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் ,மேலும் மயக்கம், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் படிப்படியாக குறையும். குடல் புற்றுநோயை தடுக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதை வேக வைத்து கொடுக்கலாம்.

இந்த காரக் கடலையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய தின்பண்டமான ஒன்று.  மழைக்காலத்தில் வாய்க்கு அசைபோட இந்த காரசாரமான கடலைப்பருப்பே போதுமானது. குழந்தைகளுக்கும் ஒரு சத்தான  ஸ்னாக்ஸ் ஆகவும் இருக்கும். ஆகவே கடலைப்பருப்பை தினமும் ஒரு கைப்பிடி அளவு நம் உணவில் சேர்த்துக் கொள்வோம்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago