என்னடா வாழ்க்கை இதுன்னு நினைக்கிறீங்களா? அப்ப இதை கண்டிப்பா படிங்க!

Published by
லீனா

வாழக்கையில் சாதிக்க இவையெல்லாம் மிகவும் அவசியம்.

இன்று அதிகமானோர் வாழ்தால் இப்படி தான் வாழ வேண்டும் என்று நினைப்பதை விட, இது என்னடா வாழ்க்கை, சீக்கிரமா இந்த வாழ்க்கை முடிஞ்சா நல்ல இருக்கும் என்று யோசிப்பவர்கள் தான் அதிகம். இதற்கு காரணம் இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில், தொடர்ந்து தோல்விகளை சந்தித்தவர்களாக இருக்கலாம் அல்லது மகிழ்ச்சி என்பது அவர்களது வாழ்க்கையில் இல்லாமலேயே போயிருக்கலாம்.

இப்படிப்பட்டவர்கள் அவர்களது வாழ்க்கையில் முன்னேறி வர வேண்டும் என்றால், முதலில் அவர்களுக்கே அவர்களை குறித்த ஒரு நன்மதிப்பு உருவாக வேண்டும்.

நம்முடைய நடை, உடை பாவனைகளை மற்றவர்கள் பார்க்கும் போது, இவன் ஒரு தைரியசாலி, இவனால் எதையும் சாதிக்க முடியும் என்ற தோற்றம் தோன்ற வேண்டும். அதற்கு நாம் நமது நெஞ்சை நிமித்தி தோலை உயர்த்தி நிற்க வேண்டும். இந்த நடைமுறை, நமது வாழ்ககையையும், நமது எதிர்காலத்தையும் குறித்த ஒரு நன்மதிப்பை நமக்குள்ளேயே தோற்றுவிப்பது மட்டுமல்லாமல், பார்ப்பவர்களுக்கும் நம் மீது ஒரு நன்மதிப்பை தோற்றுவிக்கும்

பொதுவாக நம்முடைய உடல் தோற்றத்திற்கும், நமது சிந்தனை திறனுக்கும் ஒரு தொடர்புண்டு. அது என்னவென்றால், சில ஆய்வு முடிவுகள் இதுகுறித்து கூறுகையில், ஒரு நபர் சோகமான முக பாவனையை வைத்திருந்தார் என்றால், சற்று நேரத்தில் அவர்  சோகமாகவே இருப்பதாக உணர தொடங்கி விடுவார்.

நமது உடல் தோற்றம் எவ்வாறு இருக்கிறதோ, அவ்வாறு தான் நமது நடைமுறைகளும் , செயல்பாடுகளும் இருக்கும். நாம் நேர்மறையான சிந்தனைகளை சிந்திக்கும் போது, நமது உடல் தோற்றம் அல்லது நடைமுறைகளை கவனித்து பார்த்தால், ஒரு கெம்பீரமான தோற்றம் இருப்பது தோன்றும்.

அந்த சூழலில், நம்மை நாமே நிதானித்து பார்த்தல், நம்முடைய எண்ணங்களில், இதை நம்மால் செய்ய முடியாது என்று தோன்றுவதை விட, நம்மால் முடியாது என்று ஒன்று உள்ளாதா? என்ற தன்னம்பிக்கையான எண்ணங்கள் தான் தோன்றும். எனவே, வாழ்க்கையில் என்றுமே, நாம் சாதிக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், மேற்குறிப்பிட்ட வண்ணம் நம்மை நாமே மாற்றிக் கொள்வது மிகவும் அவசியம்.

Published by
லீனா

Recent Posts

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

1 hour ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

2 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

2 hours ago

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

3 hours ago

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

3 hours ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

4 hours ago