இட்லி மஞ்சூரியன் -இட்லியை வைத்து மஞ்சுரியன் செய்வது எப்படி என இப்பதிவில் காண்போம்.
முதலில் இட்லியை சிறிது சிறிதாக க்யூப் வடிவத்தில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் கியூப் வடிவத்தில் நறுக்கி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் இட்லியை பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக பொறித்து எடுக்கவும் .
மற்றொரு பாத்திரத்தில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பூண்டை பொன்னிறமாக வறுக்கவும் .பிறகு பச்சை மிளகாய் ,வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு குடை மிளகாயையும் சேர்த்து கிளறி விடவும். அதிக நேரம் குடைமிளகாயை வதக்க கூடாது. குடைமிளகாயுடன் தக்காளி சாஸ் , சிகப்பு மிளகாய் சாஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும் ,இப்போது சோயா சாஸ் அரை ஸ்பூன் சேர்க்க வேண்டும். பிறகு அரை ஸ்பூன் கான்பிளவர் மாவை தண்ணீரில் கலந்து சேர்த்து கிளறி விடவும். கடைசியாக கொத்தமல்லி இலைகளையும் இட்லியையும் சேர்த்து மசாலா நன்கு இட்லியில் படும் வரை சிறிது நேரம் கிளறிவிட்டு இறக்கினால் இட்லி மஞ்சூரியன் தயாராகிவிடும்.
எப்போதும் இட்லி சட்னி, சாம்பார் என சாப்பிடுவதைவிட இதுபோல் மஞ்சூரியன் போல் செய்து சாப்பிடலாம் அல்லது மீதமான இட்லியை வைத்து உப்புமா செய்வதை விட இதுபோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…