சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் தான் சோயா ஜங் அதாவது மீல் மேக்கர்.. இறைச்சிக்கு சமமான புரோட்டினை இந்த மீல் மேக்கர் கொண்டுள்ளது. பருப்பு வகைகளில் இரண்டு மடங்கு புரதம் சோயாவில் தான் அதிகம் உள்ளது.
இந்த மீல் மேக்கரை வைத்து 65 வருவல், கிரேவி குழம்பு மற்றும் பிரியாணி என பல வகையில் நாம் ருசித்திருப்போம். இன்று நாம் ஒரு வித்தியாசமான முறையில் ஒரு அசத்தலான அசைவச் சுவையில் மீல் மேக்கர் கிரேவியை செய்து ருசிப்போம். மேலும் இதை யார் யார் எடுத்துக்கொள்ளக் கூடாது மற்றும் அதன் பக்க விளைவுகள், நன்மைகள் பற்றி இந்த பதிவில் வாசிப்போம்.
தேவையான பொருள்கள் :
*சோயா உருண்டை=100ஜி
*பெரிய வெங்காயம்=2
* தக்காளி=4
* பிரியாணி இலை=2
* பட்டை=2 கிராம்பு=2
* சீரகம்=1ஸ்பூன்
* மிளகு=1ஸ்பூன்
* சோம்பு =1ஸ்பூன்
* காய்ந்த மிளகாய்=3
* புதினா மற்றும் கொத்தமல்லி தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சீரகம் சோம்பு, மிளகு, பிரியாணி இலை ஒன்று, சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு அதை நைசாக கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
சோயாவை 10 நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு எடுத்து அதை தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும். அதிலே அரைத்த பேஸ்டையும் கூடவே உப்பையும் சேர்த்து கலந்து ஒரு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். அதிலே வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி தக்காளியையும் சேர்க்கவும். சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளவும். நன்கு வதங்கியதும்,கால் ஸ்பூன் மஞ்சள் தூள், மல்லித்தூள் 2 ஸ்பூன் சேர்த்து வதக்கவும். பிறகு சோயா உருண்டைகளையும் சேர்த்து கிளறவும். தண்ணீர் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். ஐந்து நிமிடம் மூடி போட்டு வேகவைத்து அதிலே புதினா கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கவும். இப்போது கம கம வென சோயா கிரேவி ரெடி..
சத்துக்கள்:
புரோட்டின் மிக அதிக அளவு நிறைந்துள்ளது. மேலும் ஒன்பது வகையான அமினோ ஆசிட்டுகள் உள்ளது.
கொழுப்புச்சத்து குறைவாக உள்ளது.
நார்ச்சத்து, கால்சியம் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் அதிகம் உள்ளன .
நன்மைகள்:
தவிர்க்க வேண்டியவர்கள் :
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…