Kuruma gravy [Image source : Awesome Cuisine]
இன்றைய சூழ்நிலைகள் காய்கறிகளின் விலை அதிகம உள்ளது, அதுமட்டுமில்லாமல் தினமும் என்ன சமைப்பது என தெரியாமல் குழம்பும் இல்லத்தரசிகளே இனிமேல் அந்த கவலையை விடுங்க… காய் இல்லாமலே நம்ம சூப்பரா குருமா செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
செய்முறை:
ஒரு மிக்ஸியில் ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பட்டை, ஏலக்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய தேங்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு, மிளகு, பொட்டுக்கடலை, முந்திரி, கசகசாவை பத்து நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் சேர்க்கவும். இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பட்டை, சிறிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள கலவையை அதில் சேர்க்கவும். ஒரு லிட்டர் வீதம் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கர் ஆறு விசில் வரும் வரை அப்படியே விடவும்.
இப்போது குக்கரை திறந்தால் வீடு மட்டும் இல்லை, தெருவே மணக்கும் குருமா ரெடி. இந்தக் குருமாவை இட்லி, தோசை சப்பாத்தி, இடியாப்பம், ஊத்தப்பம் போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதில் தேங்காய் சேர்த்துள்ளதால் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தவிர்க்கவும் .
இந்த மாதிரி காய் இல்லாத நேரங்களில் அல்லது காய் விலை அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்தக் குருமாவை செய்து அசத்துங்கள். அதுமட்டும் இல்லாமல் தினமும் சட்னி மற்றும் சாம்பார் வகைகளை செய்வதற்கு பதில் இது மாதிரி செய்து சாப்பிடுங்கள்.
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…