லைஃப்ஸ்டைல்

காய்கறி இல்லாத நேரங்களில் இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு பாருங்க சுவையாக இருக்கும்..

Published by
K Palaniammal

இன்றைய சூழ்நிலைகள் காய்கறிகளின் விலை அதிகம உள்ளது, அதுமட்டுமில்லாமல் தினமும் என்ன சமைப்பது என தெரியாமல் குழம்பும் இல்லத்தரசிகளே இனிமேல் அந்த கவலையை விடுங்க… காய் இல்லாமலே நம்ம சூப்பரா குருமா செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

  • சோம்பு – 2 ஸ்பூன்
  • பட்டை – 4
  • ஏலக்காய் – 1
  • மிளகு – ஒரு ஸ்பூன்
  • சீரகம் – ஒரு ஸ்பூன்
  • பொட்டுக்கடலை – இரண்டு ஸ்பூன்
  • முந்திரி – 2
  • இஞ்சி – மூன்று துண்டுகள்
  • பூண்டு – நாலு பள்ளு
  • கிராம்பு – மூன்று
  • தேங்காய் – அரை கப்
  • கசகசா – மூன்று ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 10
  • பெரிய வெங்காயம் – 2

வீட்டுலயே அசத்தலான மைசூர்பாகு செய்யலாம்…! வாங்க எப்படினு பார்ப்போம்..!

செய்முறை:

ஒரு மிக்ஸியில் ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பட்டை, ஏலக்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய தேங்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு, மிளகு, பொட்டுக்கடலை, முந்திரி, கசகசாவை பத்து நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் சேர்க்கவும். இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பட்டை, சிறிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள கலவையை அதில் சேர்க்கவும். ஒரு லிட்டர் வீதம் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கர் ஆறு விசில் வரும் வரை அப்படியே விடவும்.

இப்போது குக்கரை திறந்தால் வீடு மட்டும் இல்லை, தெருவே மணக்கும் குருமா ரெடி. இந்தக் குருமாவை இட்லி, தோசை சப்பாத்தி, இடியாப்பம், ஊத்தப்பம்  போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதில் தேங்காய் சேர்த்துள்ளதால் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தவிர்க்கவும் .

இந்த மாதிரி காய் இல்லாத நேரங்களில் அல்லது காய் விலை அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்தக் குருமாவை செய்து அசத்துங்கள். அதுமட்டும் இல்லாமல் தினமும் சட்னி மற்றும் சாம்பார் வகைகளை செய்வதற்கு பதில் இது மாதிரி செய்து சாப்பிடுங்கள்.

Published by
K Palaniammal

Recent Posts

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

38 minutes ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

1 hour ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

2 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

4 hours ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

5 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

5 hours ago