கலைஞர் கருணாநிதி இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. அதன் பின் இவரது பெயரை முத்துவேல் கருணாநிதி என்று மாற்றிக் கொண்டார். முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக பிறந்த இவர், திருக்குவளை என்ற குக்கிராமத்தில், 1924-ம் ஆண்டு, ஜூன்-3ம் நாள் பிறந்தார்.
இவர் சிறுவயதில் இருந்தே, தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதை தவிர, பல்வேறு கவிதைகள், புத்தகங்கள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார்.
இவர் தூக்குமேடை என்ற நாடகத்தில் நடித்ததற்கு, எம்.ஆர்.ராதா, இவருக்கு கலைஞர் என்ற பட்டம் அளித்தார். இவர் அளித்த பட்டத்தை வைத்தே இன்று வரை அழைக்கப்படுகிறார். இவர் தன்னுடைய 14-வது வயதில் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, இவர் அரசியலில் ஈடுபட்டார். இவர் தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ளார்.
இவர் உடல்நலக்குறைவால், 2018, ஆகஸ்ட், 7-ம் நாள், சென்னை மருத்துவமனையில் காலமானார். இன்று இவரது 96-வது பிறந்தநாள், இவரது பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…