இரு கருவில் பிறந்து ஓருயிராக வாழும் நண்பர்களின் தினம் நாளை!

Published by
லீனா

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வார ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்கள் என்பவர்கள் இரண்டு கருவில் பிறந்து ஒரு உயிராக வாழ்பவர்கள் தான் நண்பர்கள்.

இந்த உலகிலேயே மிக சிறந்த ஒரு உறவு நண்பர்கள் தான். இந்த உன்னதமான உறவு அனைவருக்கும் சரியான முறையில், அவர்கள் விரும்புகிற வண்ணம் கிடைப்பதில்லை. அதிலும் கூட, கடவுள் விதி என்ற ஒன்று எழுதியிருக்கிறாரோ? ஒரு சிலருக்கு உண்மையான நண்பர்கள் கிடைக்கிறார்கள். வேறு சிலருக்கு உண்மையான நட்புக்கு மாறான நண்பர்கள் கிடைக்கிறார்கள்.

சந்தோஷத்தில் கைகுலுக்க மறந்தாலும் 

சோகத்தில் கண் துடைக்க 

வரும் கரங்கள் தான் நண்பர்கள் 

அந்த வகையில், இப்படி நண்பர்கள் கிடைத்திருந்தால் அவர்களுக்கு, நண்பன் ஒரு பெரிய வரம் என்று தான் எண்ண வேண்டும்.

உன் நண்பன் யாரென்று சொல், உன்னை யார் என்று சொல்கிறேன் என்பது பழமொழி. ஆனால், நம்மை பற்றி மற்றவர்கள் அறிய வேண்டும் என்றால், நம்மிடம் நெருக்கமாக பழகும் நண்பர்களிடம் தான் கேட்டு தெரிந்து கொள்கின்றனர் அல்லது நாம் பழகும் நண்பர்களின் குணநலன்களை பொருத்தும் நாம் எடைப்போடப்படுகிறோம்.

இந்த உலகில் பெற்றோர், பணம், கல்வி என எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒரு மனிதனை நாம் பார்க்கலாம். ஆனால், நண்பர்கள் இல்லாத மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

விழிகளில் வடியும் கண்ணீர்

இதயத்தை நனைத்திடும் முன்னே

விரைந்து துடைத்திடும் விரல்கள்…!

 ஏன்னென்றால்,எவ்வளவு பெரிய சொல்ல முடியாத பிரச்னை என்றாலும், அதை தன் நண்பனிடம் மட்டும் தான் கூறுவதுண்டு. ஏன்னென்றால், அவனுக்கு தெரியும், நாம் கண்ணீர் சிந்தும் போது நமது கண்ணீரை துடைக்கும் உண்மையான கரங்கள் நமது நண்பனின் கரங்கள் தான் என்று.

நண்பர்களின் நட்பு என்பது எப்போதுமே வித்தியாசமான ஒன்றாக தான் இருக்கிறது. சில நேரங்களில் அழுத நாட்களை நினைத்து சிரிக்க வைக்கிறது. சில நேரங்களில் ஆசிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கிறது.

நமக்கு நல்ல நண்பர்கள் யார் என்றால், நமது வறுமையிலும் நமது கரத்தை பிடித்து, வருந்தாதே என கூறி நம்மை தேற்றுவது உண்மையான நட்பு. அந்த வகையில் நமக்கு கிடைத்த நண்பர்களுக்கு உண்மையாக இருப்போம். நமது நண்பர்கள் தடுமாறும் போது தாங்கி பிடிப்போம். தடம் மாறும் போதும் நேர்வழி காட்டுவோம். இதுவே உண்மையான நட்புக்கு அடையாளம்.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago