இன்று கறுப்பின தலைவரான நெல்சன் மண்டேலா பிறந்தநாள்!

Published by
லீனா

கறுப்பின மக்களின் வாழ்க்கையில், வெற்றியின் சூரியனாய் உதித்தவர் நெல்சன் மண்டேலா. இவர் 1918-ம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில், ஜூலை 18-ம் நாள் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்களின் தலைவர் ஆவார்.

நெல்சன் மண்டேலா இளம் வயதிலேயே ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு, தனது பள்ளி படிப்பை தொடர்ந்தார். இவர் போர் புரியும் கலைகளையும் பயின்றுள்ளார். இவர் சட்டக்கல்வி பயின்றுள்ளார். ஒரு தங்க சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றியுள்ளார். பின் இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர், நோமதாம் சங்கர் என்ற செவிலியரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்துள்ளனர். அதன் பின் 1958-ம் ஆண்டு வின்னி மடிகி லேனா-வை மறுமணம் செய்துள்ளார்.

இவர் இனவெறி பிடித்த வெள்ளையர்கள் ஆட்சியை எதிர்த்து போராடியுள்ளார். இனவாதமும், ஒடுக்குமுறையும், அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை கண்ட நெல்சன் மண்டேலா, கறுப்பின மக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் இவர் ‘ கறுப்பின மக்களின் தலைவர்’ என அழைக்கப்படுகிறார்.

கறுப்பின மக்களின் தலைவரான நெல்சன் மண்டேலாவின் பிறந்தநாளான ஜூலை 18-ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது. இவர் தனது 95-வது வயதில் டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.

Published by
லீனா

Recent Posts

“அவர் பொய் சொல்கிறார்., நாங்க அப்படி சொல்லவே இல்ல!” திட்டவட்டமாக மறுக்கும் கனிமொழி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…

6 minutes ago

“இன்னும் 10 வருஷம் இருக்கே.!” ஓய்வு குறித்த கேள்விக்கு ‘கிங்’ கோலியின் நச் ரீப்ளே!

துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…

1 hour ago

“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…

துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…

2 hours ago

நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை)  தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…

2 hours ago

“திமுக எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்”… பேசிவிட்டு பின் வாங்கிய தர்மேந்திர பிரதான்!

டெல்லி :  இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…

3 hours ago

தூத்துக்குடியில் பரபரப்பு… 11ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.!

ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…

3 hours ago