இது போன்ற உதவிகளை செய்தால் உங்கள் துணையின் மனஅழுத்தம் குறைய தொடங்கும்.
வீட்டில் வேலைகள் அதிகமாக இருந்தால் அதை ஒருவரே செய்யும் பட்சத்தில் மனஅழுத்தம் அதிகமாக ஏற்பட தொடங்கும். கணவன் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் உள்ள சமையல் முதல் வீட்டை சுத்தம் செய்வது வரை என அனைத்து வேலைகளையும் தனியாக செய்து வந்தால் அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய மனஅழுத்தத்தை கொடுக்கும். இந்த மனஅழுத்ததால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை தொடங்கும். இதை சமாளிப்பது என்பது அரிதாகி விடும். இதற்கு எளிய வழியில் இது போன்ற உதவிகளை உங்கள் துணைக்கு செய்யுங்கள். பாதிப்புகளும் குறையும், உங்கள் துணையின் மனஅழுத்தமும் குறையும்.
சமையல் உதவி: சமையலில் உங்கள் துணைக்கு உதவுவதன் மூலமாக மிகப்பெரிய சிக்கலில் இருந்து காக்க முடியும். காய்கறி வெட்டுதல், குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டிய பொருட்களை வைத்தல், அங்கிருக்கும் பழங்களை கழுவி வைத்தல் இது போன்ற சிறிய வேலைகளை செய்து வாருங்கள்.
சுத்தம் செய்தல்: உங்களுக்கு பெரிதாக சமைக்க தெரியாவிட்டாலும் தூய்மை படுத்துவதில் உதவி செய்வது எளிது. வீட்டை தூய்மை படுத்துவது, மேஜையை சுத்தப்படுத்துவது, படுக்கைகளை அடுக்கி வைப்பது என செய்யலாம்.
குழந்தைகளை பராமரித்தல்: வீட்டில் எந்த வேலையும் செய்யாவிட்டாலும் குழந்தைகளை பராமரிக்க உதவினாலே அது பெரிய உதவியாக இருக்கும். அதனால் குழந்தைகளை கவனித்து கொள்வது, விளையாடுவது, உணவு கொடுப்பது என செய்யலாம். பெரிய குழந்தைகளாக இருந்தால் அவர்களின் உதவியுடன் வீட்டில் தூய்மை படுத்தும் வேலையை செய்யலாம்.
இதுபோன்று செய்வது உங்கள் துணைக்கு மன நிம்மதியை கொடுக்கும். நீங்களும் துணையும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…